என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Byமாலை மலர்2 Oct 2020 1:45 PM GMT (Updated: 2 Oct 2020 1:45 PM GMT)
சுரண்டை அருகே மனநிலை பாதித்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரண்டை:
சுரண்டை அருகே கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த தர்மர் மகன் அருணாசலம் (வயது 25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் கள்ளம்புளி கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினர் சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாலச்சந்தர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறி அருணாசலத்தை பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X