search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    கொரோனா பரவல் எதிரொலி - 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் ரத்து

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நாளை நடைபெறாது என 13 மாவட்டங்களின் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

    இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாளை கிராம சபை கூட்டம் நடைபெறாது என மதுரை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட13 மாவட்டங்களின் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×