search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    ஊத்துக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 40 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் விற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பெரண்டூர், பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் மற்றும் மினி லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வந்தடைந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை.

    அரசு நெல்கொள் முதல் விலையை உயர்த்த உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பின்றி நெல்கொள் முதல் நிலையம் மூடியதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×