என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்1 Oct 2020 1:55 PM GMT (Updated: 1 Oct 2020 1:55 PM GMT)
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே நத்தக்கரை தண்ணீர் டேங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சாராயம் விற்ற மணிவிழுந்தான் காலனி ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 28) என்பவரை கடந்த மாதம் 1-ந் தேதி ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மடக்கி பிடித்து கைது செய்தார்.
சாராயம் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 105 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரசாந்த்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். உத்தரவு நகலை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்திடம் போலீசார் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X