search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி
    X
    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி

    திருவள்ளூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

    திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×