search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

    திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் டி.ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் நகராட்சியில் கட்டிட அனுமதி சான்று, பிறப்பு, இறப்புச்சான்று, மனைப்பிரிவு அங்கீகார சான்று ஆகியவைகளை பொதுமக்கள் பெற, பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதை கண்டித்தும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    திருப்பத்தூர் நகராட்சி மூலம் துப்புரவு பணியில் குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து, அதிக தொழிலாளர்கள் வேலை செய்வதாக பொய் கணக்கு எழுதி மோசடி செய்யும் போக்கு தொடர்வதால் நகரத்தில் குப்பை மேடுகள் அதிகரித்து மலைபோல் காட்சி அளிக்கிறது. குப்பைகள் தேங்கி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி சுத்தம் செய்யாமல் புல்பூண்டு முளைத்துள்ளது. மேலும் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நகராட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள். 

    ஆர்ப்பாட்டத்தில் ரங்கன், கேசவன், ஜோதி, காசி, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×