என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசுதேவநல்லூரில் காரில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2020 7:55 AM GMT (Updated: 1 Oct 2020 7:55 AM GMT)
வாசுதேவநல்லூரில் வாகன சோதனையின் போது காரில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுனாசிங் உத்தரவின் பேரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று ராயகிரி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் காரில் வந்தனர்.
உடனே காரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் 5 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் இருந்தது. விசாரணையில் சட்டத்திற்கு விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் சிவகிரி பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(வயது 42), சுரேஷ்(25) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுனாசிங் உத்தரவின் பேரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று ராயகிரி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் காரில் வந்தனர்.
உடனே காரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் 5 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் இருந்தது. விசாரணையில் சட்டத்திற்கு விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் சிவகிரி பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(வயது 42), சுரேஷ்(25) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X