search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முககவசம் அணியாத 343 பேர் மீது வழக்குப்பதிவு

    நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 343 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி போலீசார் முககவசம் அணியாத நபர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    அந்தவகையில் நேற்று முககவசம் அணியாத 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.68 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×