search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தூசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை

    தூசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி அருகே மாங்கால் கூட்டுரோடு பகுதியில் காஞ்சிபுரம் -செய்யாறு சாலையில் மாது என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு கோடீஸ்வரன், மோகன் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் முகமூடியுடன் மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் போட வந்தது போல் நடித்து ஊழியர் கோட்டீஸ்வரனை தாக்கி அவரிடமிருந்த பணப்பை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பணப்பையில் ரூ.40,000 இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் பரமன் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×