என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்30 Sep 2020 2:00 PM GMT (Updated: 30 Sep 2020 2:00 PM GMT)
தூசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
தூசி அருகே மாங்கால் கூட்டுரோடு பகுதியில் காஞ்சிபுரம் -செய்யாறு சாலையில் மாது என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு கோடீஸ்வரன், மோகன் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் முகமூடியுடன் மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் போட வந்தது போல் நடித்து ஊழியர் கோட்டீஸ்வரனை தாக்கி அவரிடமிருந்த பணப்பை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பணப்பையில் ரூ.40,000 இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் பரமன் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X