என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
Byமாலை மலர்30 Sep 2020 8:39 AM GMT (Updated: 30 Sep 2020 8:39 AM GMT)
கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் உள்ள சில தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் குளம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை சாலையில் குட்டை போல் தேங்கி உள்ள மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அம்மாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா பிரகாஷ் கூறுகையில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே மழை மற்றும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. எங்கள் பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் கட்டித்தர கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கட்டித் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதன் பிறகாவது எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.
கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் உள்ள சில தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் குளம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை சாலையில் குட்டை போல் தேங்கி உள்ள மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அம்மாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா பிரகாஷ் கூறுகையில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே மழை மற்றும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. எங்கள் பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் கட்டித்தர கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கட்டித் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதன் பிறகாவது எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X