என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனுஷ்கோடி கடலில் ஒதுங்கிய ராட்சத மிதவை
Byமாலை மலர்30 Sep 2020 1:33 AM GMT (Updated: 30 Sep 2020 1:33 AM GMT)
தனுஷ்கோடி கடலில் ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்ததாளை கடற்கரையில் பெரிய உருளை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கே கரை ஒதுங்கி கிடந்த உருளையை பார்வையிட்டபோது அது கடலில் மிதக்க விடக்கூடிய மிதவை என்பதும், ரப்பரால் செய்யப்பட்டது என்பதும், 2 டன் எடை கொண்டதும் எனவும் தெரியவந்தது.
இந்த மிதவையானது, பெரிய கப்பல்களை துறைமுக பகுதியில் நிறுத்தும்போது கப்பலின் ஓரப்பகுதி அலையின் வேகத்தால் சேதம் அடையாமல் இருக்க போடப்பட்டு இருக்கும். மேலும் கடல் வழிப்பாதையை அடையாளம் காட்டுவதற்கும் இந்த மிதவை பயன்படுத்தபடும் என்று கடலோர போலீசார் தெரிவித்தனர்.
இந்த ராட்சத மிதவையானது தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியிலிருந்து இழுத்து வரப்பட்டதா அல்லது ஆழ்கடல் பகுதியில் இருந்து அலையில் இழுத்து வரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்ததாளை கடற்கரையில் பெரிய உருளை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கே கரை ஒதுங்கி கிடந்த உருளையை பார்வையிட்டபோது அது கடலில் மிதக்க விடக்கூடிய மிதவை என்பதும், ரப்பரால் செய்யப்பட்டது என்பதும், 2 டன் எடை கொண்டதும் எனவும் தெரியவந்தது.
இந்த மிதவையானது, பெரிய கப்பல்களை துறைமுக பகுதியில் நிறுத்தும்போது கப்பலின் ஓரப்பகுதி அலையின் வேகத்தால் சேதம் அடையாமல் இருக்க போடப்பட்டு இருக்கும். மேலும் கடல் வழிப்பாதையை அடையாளம் காட்டுவதற்கும் இந்த மிதவை பயன்படுத்தபடும் என்று கடலோர போலீசார் தெரிவித்தனர்.
இந்த ராட்சத மிதவையானது தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியிலிருந்து இழுத்து வரப்பட்டதா அல்லது ஆழ்கடல் பகுதியில் இருந்து அலையில் இழுத்து வரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X