என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்29 Sep 2020 3:06 PM GMT (Updated: 29 Sep 2020 3:06 PM GMT)
வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் எல்.கே.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு என்கின்ற ஆறுமுகம் (வயது 59) தொழிலாளி. இவருக்கு லோகாம்பாள் என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வெள்ளகோவில் - மூலனூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X