search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30) மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் (30) என்பதும், இருவரும் கடந்த 2 மாதமாக ஆற்காடு, திமிரி, சிப்காட் ஆகிய பகுதிகளில் செல்லும் நபர்களை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டியும், மிளகாய் பொடி தூவியும் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×