என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 113 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்29 Sep 2020 8:40 AM GMT (Updated: 29 Sep 2020 8:40 AM GMT)
குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 113 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முககவசம் அணிய வேண்டும், கடைகளுக்கு சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கட்டப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 113 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.23 ஆயிரத்து 200 வசூலானது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டுதனிமை என 705பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். இதில் கோவிட் சுகாதார மையத்தில் இருந்து 34 பேரும், கோவிட் கவனிப்பு மையத்தில் இருந்து 32 பேரும் குணமடைந்து வீடு திருப்பினர்.
இந்த தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X