search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை முகாம்

    ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரியூர், சுஞ்சல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    ஏரியூர்:

    ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரியூர், சுஞ்சல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பாலவெங்கடேசன் தலைமையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் மாதையன், சுப்பிரமணி, ஆய்வக அலுவலர் சோனியா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய ஊட்டச்சத்து விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தொட்டி, ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×