என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
Byமாலை மலர்29 Sep 2020 1:49 AM GMT (Updated: 29 Sep 2020 1:49 AM GMT)
பொன்னேரி அருகே கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் வசிப்பவர் தாஸ் (வயது 40). இவரது மகன் நரேன் (14). இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நரேன் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அவன் விட்ட காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி கொண்டது. இதையடுத்து நரேன் காற்றாடியை எடுப்பதற்காக கம்பு ஒன்றை எடுத்து மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடி எடுக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.
இதைக்கண்ட அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் நரேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் வசிப்பவர் தாஸ் (வயது 40). இவரது மகன் நரேன் (14). இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நரேன் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அவன் விட்ட காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி கொண்டது. இதையடுத்து நரேன் காற்றாடியை எடுப்பதற்காக கம்பு ஒன்றை எடுத்து மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடி எடுக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.
இதைக்கண்ட அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் நரேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X