search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி உள்ள மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக சென்றார். அப்போது, கொட்டகையின் மேல் பகுதியில் இருந்த இரும்பு குழாய் மீது, ஹரிகிருஷ்ணனின் கை பட்டதாக தெரிகிறது. அதில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவருடைய மகன் கமலக்கண்ணன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×