search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

    சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 27). இவர் கிரில் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் முஸ்தபா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    தாதகாப்பட்டி செல்லக்குட்டி காடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (38). தறி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாதகாப்பட்டி போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று சேலம் மேற்கு மக்கான் தெருவை சேர்ந்தவர் முகமது இப்தாகிர். இவரது மகன் நசுருதீன் (20). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×