என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Sep 2020 6:39 AM GMT (Updated: 28 Sep 2020 6:39 AM GMT)
பெரம்பலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(வயது 50). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி. இவர்களுக்கு நல்லசெல்லம்(21), நல்லம்மாள்(17) என 2 மகள்கள் உள்ளனர். கண்ணகி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். நல்லசெல்லத்துக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். மனைவி இறந்த பிறகு சுந்தரபாண்டியன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் நேற்று முன்தினம் இரவு மூத்த மகள் நல்லசெல்லம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, தூங்க தனது வீட்டிற்கு வந்துள்ளார். 2-வது மகள் நல்லம்மாள் தனது உறவினர் வீட்டில் இருந்தார். நேற்று காலையில் நல்லசெல்லம் வந்து பார்த்த போது, வீட்டில் சுந்தரபாண்டியன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து, சுந்தரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நல்லசெல்லம் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X