search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    திருமக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமக்கோட்டை

    திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அய்யப்பன்(வயது25). தொழிற்கல்வி படித்துள்ள இவர் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என மனவருத்தத்தில் இருந்தார். சம்பவத்தன்று மிகுந்த மனவருத்தத்தில் இருந்த அய்யப்பன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×