search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மா சுப்பிரமணியன்
    X
    மா சுப்பிரமணியன்

    திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு

    திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


    Next Story
    ×