search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலி

    நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த திருமழிசை ஜவகர் நகரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 55). இவர், நீலாங்கரை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 17-ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் டில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் 17-ந் தேதி புருசோத்தமனுக்கு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அவர் கொரோனா தொற்றால் பதவி ஏற்க முடியாமாலேயே இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×