search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலி

    திருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள வரக்கோன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45) .இவர், சொந்தமாக மருங்காபுரியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் தொழில் தொடர்பாக திருசிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுப்பிரமணி, திருச்சி மன்னார்புரம் பிரிவு சாலையில் வலதுபுறம் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்த சுப்பிரமணி, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருச்சி கே.கே.நகர் மாதவன்ரோட்டை சேர்ந்த திலீப்போன் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×