search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பீத்தாக்கங்ரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்த ராம்பாபு மகன் சோனு (வயது 23), சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×