search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் முதியவர் தற்கொலை

    கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொட்டாம்பட்டி:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிப்பட்டியை சேர்ந்தவர் நாகூர்( வயது 75). வாரச்சந்தையில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பாரிஷா(65). குடும்ப கடன் சம்பந்தமாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இதனால் மனமுடைந்த நாகூர் சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் உப்பாறு பாலம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×