என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொப்பூர் அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2020 8:23 AM GMT (Updated: 27 Sep 2020 8:23 AM GMT)
தொப்பூர் அருகே ஆடுகளை திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் ஆடுகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். விடியற்காலை மர்ம நபர்கள் 3 பேர் வடிவேலின் வீட்டை பூட்டி விட்டு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வடிவேல் உடனடியாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் எரங்காடு அடுத்த குயவர்காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (30), வடிவேல் (32), 15 வயது சிறுவன் என்பதும், வடிவேலின் ஆடுகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டு வடிவேலிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X