search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொப்பூர் அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது

    தொப்பூர் அருகே ஆடுகளை திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் ஆடுகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். விடியற்காலை மர்ம நபர்கள் 3 பேர் வடிவேலின் வீட்டை பூட்டி விட்டு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வடிவேல் உடனடியாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

    அதன்பேரில் போலீசார் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் எரங்காடு அடுத்த குயவர்காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (30), வடிவேல் (32), 15 வயது சிறுவன் என்பதும், வடிவேலின் ஆடுகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டு வடிவேலிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×