என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்27 Sep 2020 3:57 AM GMT (Updated: 27 Sep 2020 3:57 AM GMT)
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:
கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக ‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலுக்கு கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக கொடைக்கானலில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் திறக்கப்பட்டன. மேலும் கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலமும் கடந்த 2 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இ-பாஸ் பெற்று ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்த்து ரசித்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழில்கொஞ்சும் இடங்களை கண்டுகளித்தனர். தரையிறங்கும் மேககூட்டத்தை கண்டு குதூகலித்தனர். அவ்வப்போது தூறி கொண்டிருந்த சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே அவற்றையும் திறந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X