search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

    காரிமங்கலம் பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சந்தைப்பேட்டை, மாட்லாம்பட்டி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது காரிமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 32), மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (60) ஆகிய 2 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×