search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    விருதுநகர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது33). இவருடைய கணவர் மூர்த்தி (43). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனை வேலம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலம்மாள் அளித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×