search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கந்தம்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    கந்தம்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம்:

    பரமத்தி தாலுகா கந்தம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கந்தம்பாளையம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பரமத்தி மறவபாளையத்தை சேர்ந்த குமார் மகன் பிரகாஷ் (வயது 23), அதே ஊரை சேர்ந்த கருப்புசாமி மகன் கவுதம் (33) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×