search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 346 பேர் மீது வழக்குப்பதிவு

    கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 323 பேர் மீதும், பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 23 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 இடங்களில் முககவசம் அணியாத 280 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
    Next Story
    ×