search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்குரு ஜக்கி வாசுதேவ்
    X
    சத்குரு ஜக்கி வாசுதேவ்

    மக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர் -எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
    கோவை:

    இந்திய இசை உலகின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நடலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எஸ்பிபி, பன்முகத்தன்மை கொண்ட தன் மெல்லிசை குரலால் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த வித்தகர். மக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர். அவரது கலைக்காக நேசிக்கப்பட்டதை போல பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர். அவரது குடும்பத்தினர் நண்பர்கள் ரசிகர்களுக்கு நமது இரங்கல்கள்’ என கூறியுள்ளார்.
    Next Story
    ×