search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கந்தம்பாளையம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலி

    கந்தம்பாளையம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கந்தம்பாளையம்:

    பரமத்தி தாலுகா இருகூர் செல்லப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 19). டிரைவர் தொழில் செய்து வந்தார். நிதிஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பன் ஊருக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வரும் போது தொட்டியம் தோட்டம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×