search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்பி பாலசுப்பிரமணியம்
    X
    எஸ்பி பாலசுப்பிரமணியம்

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

    தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    திருவள்ளூர்:

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதேபோல் எஸ்பிபி உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×