search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    வீட்டின் பீரோவில் வைத்திருந்த 26½ பவுன் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை

    மதுரையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 26½ பவுன் நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை செல்லூர் முத்துராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 47). இவர் மகளின் திருமணத்திற்கு கொடுத்த 26½ பவுன் நகைகளை வாங்கி தனது வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். சம்பவத்தன்று திருமணத்திற்கு செல்வதற்காக அந்த நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்துள்ளார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை.

    இதுகுறித்து முனியம்மாள் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×