search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாலக்கோட்டில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    பாலக்கோடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அத்திமுட்லு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். 

    அப்போது அத்திமுட்லு சிவன் கோவில் பின்புறம் அதேப்பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 42), சுரேஷ் காந்தி (42), ரமேஷ் (34), கிருஷ்ணன் (49), கரகூரை சேர்ந்த மாதையன் (47) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம், சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×