search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தாளக்குடி பகுதியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

    தாளக்குடி பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கொள்ளிடம் டோல்கேட்:

    தாளக்குடி பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி சத்யா நகரை சேர்ந்த மனோகரன் மகன் அரவிந்த் (வயது 25). பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனது தாய் மஞ்சுளாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அரவிந்த் கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி வந்தார். இருப்பினும் இவருக்கு எவ்வித வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அரவிந்த் நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைகண்ட அவரது தாய் மஞ்சுளா அதிர்ச்சியில் மகனை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார்.

    இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மின்விசிறியில் தூக்கில் தொங்கிய அரவிந்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நெ.1டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×