என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாளக்குடி பகுதியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2020 2:06 PM GMT (Updated: 24 Sep 2020 2:06 PM GMT)
தாளக்குடி பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளிடம் டோல்கேட்:
தாளக்குடி பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி சத்யா நகரை சேர்ந்த மனோகரன் மகன் அரவிந்த் (வயது 25). பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனது தாய் மஞ்சுளாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அரவிந்த் கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி வந்தார். இருப்பினும் இவருக்கு எவ்வித வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அரவிந்த் நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைகண்ட அவரது தாய் மஞ்சுளா அதிர்ச்சியில் மகனை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார்.
இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மின்விசிறியில் தூக்கில் தொங்கிய அரவிந்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நெ.1டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X