search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,744 ஆக அதிகரிப்பு

    கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,744 ஆக உயர்ந்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு சுகாதாரத்துறையினர் வீடு, வீடுடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பீளமேடு, ராமநாதபுரம், வெள்ளக்கிணறு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ரத்தினபுரி, உக்கடம், காந்திபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, அன்னூர், சூலூர், காரமடை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,744 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 40 வயது வாலிபர் உள்பட 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 512 பேர் நேற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது 4,630 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,751 ஆக இருந்தது. ஆனால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,744 ஆக உயர்ந்துள்ளது. எனவே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 24-ந் தேதி 237 ஆக இருந்தது. தற்போது 396 ஆக அதிகரித்து உள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 159 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×