என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.க்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்23 Sep 2020 7:05 PM GMT (Updated: 23 Sep 2020 7:05 PM GMT)
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லைகங்காநகரில் வசிப்பவர் ஆர்.எஸ்.பாரதி(வயது 73). தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இருந்த எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி.க்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தது. இதையடுத்து டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் கலந்து கொண்டார்.
கடந்த 19-ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவருக்கு தொண்டை கரகரப்பாக இருப்பதாக கூறி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்தநிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆர்.எஸ்.பாரதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லைகங்காநகரில் வசிப்பவர் ஆர்.எஸ்.பாரதி(வயது 73). தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இருந்த எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி.க்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தது. இதையடுத்து டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் கலந்து கொண்டார்.
கடந்த 19-ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவருக்கு தொண்டை கரகரப்பாக இருப்பதாக கூறி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்தநிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆர்.எஸ்.பாரதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X