என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்23 Sep 2020 1:52 PM GMT (Updated: 23 Sep 2020 1:52 PM GMT)
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவரது தாயார் மல்லிகா (60) மற்றும் இவர்களுடைய உறவினர் பார்வதி (52). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை முடிந்து 3 பேரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடு புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X