என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கேயம் அருகே மொபட் மீது லாரி மோதல்- முதியவர் பலி
Byமாலை மலர்23 Sep 2020 1:36 PM GMT (Updated: 23 Sep 2020 1:36 PM GMT)
காங்கேயம் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
காங்கேயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நல்லிக்கவுண்டன் வலசை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 80) விவசாயி. இவர் நேற்று மாலை மொபட்டில் நல்லிக்கவுண்டன் வலசில் இருந்து ரேசன் கடைக்கு சென்றார். பின்னர் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நல்லிக்கவுண்டன் வலசு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது காங்கேயத்திலிருந்து வந்த லாரி இவர் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுப்பராயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சுப்பராயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தவிபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X