search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்சியில் தூக்குப்போட்டு வக்கீல் தற்கொலை

    திருச்சியில் மூட்டு வலி மற்றும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வக்கீல் ராம்குமார் (வயது 53). இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். ராம்குமார் மட்டும் திருச்சியில் தனியாக தங்கி இருந்து வக்கீல் தொழில் செய்து வந்தார். 
    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் ராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    தற்கொலை செய்வதற்கு முன் வக்கீல் ராம்குமார் தனது மனைவிக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் மூட்டு வலி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×