என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் தூக்குப்போட்டு வக்கீல் தற்கொலை
Byமாலை மலர்23 Sep 2020 12:29 PM GMT (Updated: 23 Sep 2020 12:29 PM GMT)
திருச்சியில் மூட்டு வலி மற்றும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வக்கீல் ராம்குமார் (வயது 53). இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். ராம்குமார் மட்டும் திருச்சியில் தனியாக தங்கி இருந்து வக்கீல் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் ராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன் வக்கீல் ராம்குமார் தனது மனைவிக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் மூட்டு வலி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X