search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போராட்டம்

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வெள்ளகோவில்:

    வேலை நிறுத்த காலங்கள் அனைத்தையும் பணிக்காலமாக வரன்முறை செய்யக்கோரியும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் தொகையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 73 சதவீத ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×