search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோர்ட்டு உதவியாளர் உள்பட கொரோனாவுக்கு 2 பேர் பலி

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு கோர்ட்டு உதவியாளர் உள்பட 2 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 61 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த ஒருவரின் பெயர் பட்டியல் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். ராசிபுரத்தை சேர்ந்த 63 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கடந்த 11-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. அவர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதேபோல் பரமத்தி கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்து உள்ளது.
    Next Story
    ×