search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பரமத்திவேலூர் அருகே மதுவிற்ற 3 பேர் கைது - 121 பாட்டில்கள் பறிமுதல்

    பரமத்திவேலூர் அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 121 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

    -அப்போது பழைய பை-சாலை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 37), மேலூர் அருகே உள்ள அயோத்தம்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (21), திருவாரூர் மாவட்டம், கோழிசெட்டியாக்குறிச்சியை சேர்ந்த கணேசன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 121 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×