என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையங்கோட்டை அருகே புதுப்பெண்ணுக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
Byமாலை மலர்22 Sep 2020 3:24 PM GMT (Updated: 22 Sep 2020 3:24 PM GMT)
பாளையங்கோட்டை அருகே புதுப்பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சாலமோன். இவருடைய மனைவி வசந்தி (வயது 23). இவர் கிள்ளிக்குளத்தில் உள்ள கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று வசந்தி தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டையை அடுத்துள்ள அரியகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் சக்திகுமார் (25) என்பவர் அவரை வழிமறித்து தகராறு செய்தார்.
அப்போது திடீரென சக்திகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வசந்தியை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த வசந்தியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X