search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    நெல்லை அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேட்டை:

    நெல்லை அருகே பேட்டையை அடுத்த சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 55). இவர் அப்பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    செல்லப்பாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் செல்லப்பா உடல்நிலை சரியாகி நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்ததை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம், 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு ரூ.3½ லட்சம். இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் செல்லப்பா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×