என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு - 3 முதியவர்கள் பலி
Byமாலை மலர்22 Sep 2020 1:14 AM GMT (Updated: 22 Sep 2020 1:14 AM GMT)
சேலம் மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 முதியவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 291 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 156 பேர், சேலம் ஒன்றியத்தில் 18 பேர், வீரபாண்டியில் 17 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 10 பேர், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், நங்கவள்ளியில் 7 பேர், சங்ககிரி, காடையாம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேட்டூர், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், எடப்பாடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, வாழவந்தி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த, சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த 64 வயதுடைய முதியவரும், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் சேலத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவரான, கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.
மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 361 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 291 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 156 பேர், சேலம் ஒன்றியத்தில் 18 பேர், வீரபாண்டியில் 17 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 10 பேர், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், நங்கவள்ளியில் 7 பேர், சங்ககிரி, காடையாம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேட்டூர், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், எடப்பாடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, வாழவந்தி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த, சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த 64 வயதுடைய முதியவரும், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் சேலத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவரான, கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.
மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 361 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X