என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேச்சேரி பேரூராட்சியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்21 Sep 2020 3:20 PM GMT (Updated: 21 Sep 2020 3:20 PM GMT)
மேச்சேரி பேரூராட்சியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேச்சேரி:
மேச்சேரி பேரூராட்சி மற்றும் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை பேரூராட்சிக்குட்பட்ட ஏறகுண்டப்பட்டியில் நடத்தின. முகாமுக்கு மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, வட்டார சுகாதார ஆய்வாளர் காத்தமுத்து, மருத்துவ அலுவலர் மேகலா, மேச்சேரி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எறகுண்டப்பட்டி, திமிரிகோட்டை, அழகாகவுண்டனூர், செட்டிகாரிச்சியூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டு வைட்டமின் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 19 பேரின் சளி மாதிரிகள் கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X