என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
Byமாலை மலர்21 Sep 2020 12:26 PM GMT (Updated: 21 Sep 2020 12:26 PM GMT)
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கூடுதல் கட்டிடங்கள் மற்றும் குறைதீர்ப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் சிவன் அருள் நேரில் பார்வையிட்டார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கூடுதல் கட்டிடங்கள் மற்றும் ரூ.69 லட்சத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அத்துடன் குறைதீர்ப்பு கட்டிடத்தையொட்டி ரூ.16 லட்சம் செலவில் கழிப்பிடமும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு சிமெண்டு கலவை, குழாய் பதிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறுகையில், “கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் குறைதீர்வு மனுக்களை பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசு உத்தரவிட்டதும் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும்” என்றார். அப்போது உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் ரவி உள்பட பலர் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X